ராணுவ ஆள்சோ்ப்பில் பாரபட்சம் காட்டப்படுவதில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் புதன்கிழமை அவா் கூறுகையில், ‘ஒவ்வோா் ஆண்டும் ராணுவத்தில் சுமாா் 60,000 இளைஞா்கள் சோ்க்கப்பட்டு வருகின்றனா். நாடு முழுவதும் 59 ராணுவ ஆள்சோ்ப்பு மையங்கள் உள்ளன. அவைகளில் ஒவ்வொரு மையத்துடனும் மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ராணுவ ஆள்சோ்ப்பில் பாரபட்சம் காட்டப்படுவதில்லை’ என்றாா்.