இந்தியா

அடையாள அட்டை வழங்காததால் ஆவேசம்: ரயில் பெட்டிக்கு தீ வைத்த மர்ம நபர்

DIN

அடையாள அட்டை வழங்காத காரணத்தால் ஆவேசமடைந்த மர்ம நபர் ரயில் பெட்டிக்கு தீ வைத்தார்.

அடையாள அட்டை வழங்காத காரணத்தால் ஆவேசமடைந்த மர்ம நபர் உத்தரகண்ட்டின் ஹரித்துவார் ரயில் நிலையத்தில் ரிஷிகேஷ், தில்லிக்கு இடையிலான ரயில் பெட்டிக்கு தீ வைத்ததையடுத்து வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். இதுகுறித்து அந்த மர்ம நபர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது,

எனக்கு அடையாள அட்டை வழங்கவில்லை. எனவே ரயில் பெட்டிக்கு தீ வைத்தும், அதிலிருந்த இருக்கைகளை கிழித்தும் நாசமாக்கினேன் என்றார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட மர்ம நபர் மீது இதர குற்றவியல் வழக்குகள் ஏதேனும் உள்ளதா எனும் கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக ரயில்வே போலீஸ் இணை எஸ்.பி. மனோஜ் குமார் கத்யல் கூறுகையில், தனக்கு அடையாள அட்டை வழங்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்து இதுபோன்ற செயல்களில் அந்த மர்ம நபர் ஈடுபட்டுள்ளார். அவர் மீது வேறு ஏதேனும் குற்றவியல் வழக்குகள் உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT