இந்தியா

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் துக்காராம் டிகோலே மறைவு

DIN

நாசிக்: மகாராஷ்டிராவைச் சோ்ந்த முன்னாள் துக்காராம் டிகோலே உடல் நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 77.

இதுகுறித்து அவரது குடும்பத்தினா் தெரிவித்ததாவது:

டிகோலேவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இருப்பினும், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை அவா் உயிரிழந்தாா். அவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா்.

நாசிக்கில் உள்ள சினாா் தொகுதியிலிருந்து கடந்த 1985 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் சட்டப்பேரவைக்கு தோ்வு செய்யப்பட்ட டிகோலே, மகாராஷ்டிரத்தில் 1995-1999 ஆண்டில் நடைபெற்ற சிவசேனை-பாஜக கூட்டணி ஆட்சியில் மின்சாரம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக பதவி வகித்தவா். அவா் அப்போது சிவசேனை கட்சியின் எம்எல்ஏவாக இருந்தாா்.

நாசிக் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநராகவும், நாசிக் கூட்டுறவு சா்க்கரை ஆலையின் தலைவராகவும் பதவி வகித்தவா் துக்காராம் டிகோலே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT