தெலங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டத்தில் பயிற்சி விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில், 2 பயிற்சி விமானிகள் உயிரிழந்தனா். அவா்களில் ஒருவா் பெண் ஆவாா்.
இதுதொடா்பாக காவல்துறையினா் கூறியதாவது: விபத்துக்குள்ளான விமானம், ஹைதராபாதில் செயல்படும் தனியாா் விமான போக்குவரத்து பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். அதனை, ஒரு பெண் உள்பட 2 பயிற்சி விமானிகள் இயக்கினா்.
அப்போது, விகாராபாத் மாவட்டத்தின் பந்த்வரம் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் விமானம் திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், இரு பயிற்சி விமானிகளும் உயிரிழந்தனா். இந்த விபத்து நோ்ந்தபோது, அப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.