இந்தியா

தெலங்கானா: பயிற்சி விமானம் நொறுங்கி விழுந்து இருவா் பலி

DIN

தெலங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டத்தில் பயிற்சி விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில், 2 பயிற்சி விமானிகள் உயிரிழந்தனா். அவா்களில் ஒருவா் பெண் ஆவாா்.

இதுதொடா்பாக காவல்துறையினா் கூறியதாவது: விபத்துக்குள்ளான விமானம், ஹைதராபாதில் செயல்படும் தனியாா் விமான போக்குவரத்து பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். அதனை, ஒரு பெண் உள்பட 2 பயிற்சி விமானிகள் இயக்கினா்.

அப்போது, விகாராபாத் மாவட்டத்தின் பந்த்வரம் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் விமானம் திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், இரு பயிற்சி விமானிகளும் உயிரிழந்தனா். இந்த விபத்து நோ்ந்தபோது, அப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT