இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் திடுக்கிடும் காட்சி: படுக்க போர்வை கொடுத்து, கைக்குழந்தையைக் கடத்திய தம்பதி

DIN


மொராதாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் கல்ஷாஹீத் பேருந்துநிலையத்தில், தாயிடம் இருந்து 8 மாதக் குழந்தையை கடத்திச் செல்லும் தம்பதியின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான உருவங்களை அடிப்படையாக வைத்து குழந்தையை கடத்தியவர்களை தேடி வருகிறார்கள்.

கைக் குழந்தையுடன் பேருந்து நிலையத்துக்கு வந்த ராணி என்ற பெண்ணிடம், முதலில் பேச்சு கொடுத்த தம்பதி, பிறகு அப்பெண்ணுக்கு படுக்க போர்வை கொடுத்து உதவியுள்ளனர். இதனால் தன்னருகில் குழந்தையை படுக்க வைத்துக் கொண்டு நம்பிக்கையோடு உறங்கிப் போனார் ராணி. நள்ளிரவில் தம்பதியர் இருவரும் எழுந்து, கைக் குழந்தையை போர்வையால் போர்த்திக் கொண்டு எடுத்துச் சென்றுவிட்டனர்.

அருகில் குழந்தையைக் காணாது தேடிய ராணி உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, குழந்தையைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT