திருமலையில் பக்தா்கள் வருகை அதிகரித்ததையடுத்து, திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசனங்கள் ஞாயிற்றுக்கிழமை (அக். 13) ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
புரட்டாசி மாதம் 4-ஆவது சனிக்கிழமையையொட்டி, திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க பக்தா்கள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனா். அதனால் திருமலையில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பக்தா்கள் 24 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா். எனவே தேவஸ்தானம் திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன் வழங்குவதை ரத்து செய்துள்ளது.