மகாராஷ்டிராவில் பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் பரப்புரை மேற்கொள்கின்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் மற்றும் பாஜக - சிவசேனா ஆகிய கூட்டணிக் கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிர மாநிலம் ஜால்கௌன் மற்றும் சகோலியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதேபோல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்திவாலி, தாராவி மற்றும் லதூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.