இந்தியா

சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து லேண்டர் வெற்றிகரமாக பிரிப்பு

விண்கலத்திலிருந்து லேண்டர் பிரிக்கும் நிகழ்வை விஞ்ஞானிகள் திங்கள்கிழமை மேற்கொண்டனர்.

DIN

நிலவைச் சுற்றி வந்துகொண்டிருக்கும் சந்திரயான்-2 விண்கலத்தின் இறுதி மற்றும் ஐந்தாவது கட்ட நீள்வட்டப் பாதை குறைப்பு நடவடிக்கையை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனர்.

இதன் மூலம் நிலவின் பரப்பிலிருந்து குறைந்தபட்சம் 119 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 127 கி.மீ. தொலைவையும் கொண்ட நீள்வட்டப் பாதையில் விண்கலம் சுற்றி வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக, மிக முக்கியமான விண்கலத்திலிருந்து லேண்டர் பிரிக்கும் நிகழ்வை விஞ்ஞானிகள் திங்கள்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டனர். மதியம் 1:25 மணியளவில் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.

லேண்டர் பிரிக்கப்பட்ட பின்னர், மேலும் இரண்டு முறை விண்கலத்தின் நீள்வட்டப் பாதை குறைப்பு நடவடிக்கையை செப்டம்பர் 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் விஞ்ஞானிகள் மேற்கொள்ள உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய யோகாசனப் போட்டிகள்: பழனி மாணவி இரண்டாமிடம்

தீபாவளி: மருத்துவர்கள் பணியில் இருக்க அறிவுறுத்தல்

பல்லடம் - வெள்ளகோவில் தேசிய நெடுஞ்சாலையில் 5 ஆயிரம் மரக்கன்று நடவு

அகில இந்திய தொழில்தோ்வில் சிறப்பிடம்! மாணவர்களுக்கு ஆட்சியா் பாராட்டு!

தீபாவளி பண்டிகை: திருப்பூா் மாநகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT