அசாமில் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினர் 
இந்தியா

ஆயுதப்படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டம்  அசாமில் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

ஆயுதப்படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டமானது அசாமில் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

DIN

கவுஹாத்தி: ஆயுதப்படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டமானது அசாமில் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் பிரச்சினைக்குரிய பகுதிகளில் அமைதியை நிலைநாட்டும் பொருட்டு ஆயுதப்படையினர் பணியமர்த்தப்படுகின்றனர். அப்போது அங்கு நிலவும் சூழலைச் சமாளிக்கும் பொருட்டு அவர்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப் பிரிவானது உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த சிறப்பு சட்டமானது ஆயுதப்படையினருக்கு கூடுதல் அதிகாரங்களை  வழங்குகிறது.

அதன்படி பொது அமைதியை பரமாரிக்கும் பொறுப்புடன், அதன்பொருட்டு எவரையும் கைது செய்யவும், எந்தப் பகுதியிலும் சோதனை நடத்தவும் ஆயுதப்படையினருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக அவ்வப்போது  சர்ச்சைகள் எழுவது குறிப்பிடத்தக்கது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் அமலில் இருக்கும் இந்த சட்டமானது, 1990-ம் ஆண்டு முதல் அசாமில் நீடித்து வருகிறது.

இந்நிலையில் ஆயுதப்படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டமானது அசாமில் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அசாம் அரசு  வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் ஒட்டுமொத்த மாநிலமும் பதட்டமான பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT