கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரை தனக்கு உதவியாக நியமித்தார்.
அதில், பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாக நிருபேந்திர மிஸ்ரா (74) நியமிக்கப்பட்டார். இதையடுத்து தனது பதவியில் இருந்து விலகுவதாக ஆகஸ்ட் 30-ஆம் தேதி ராஜிநாமா கடிதம் அளித்தார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் புதிய முதன்மைச் செயலராக பி.கே.மிஸ்ரா புதன்கிழமை பதவியேற்றார்.
அதுமட்டுமல்லாமல் பிரமதர் நரேந்திர மோடியின் தலைமை ஆலோசகராக பி.கே.சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.