இந்தியா

மகாராஷ்டிராவில் இரண்டு நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! 

DIN

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சல் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் இரண்டு நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

சத்தீஸ்கர், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல் தீவிரவாதிகளின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் மாநில போலீஸ் படையினரும், பாதுகாப்புப்படையினரும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் 'நர்காசா' வனப்பகுதியில் நக்சல் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து, பாதுகாப்புப்படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகளை நோக்கி பாதுகாப்புப்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து, தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT