இந்தியா

பிரதமருடனான சந்திப்பின்போது மேற்கு வங்க பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்:  மம்தா பானர்ஜி

DIN


பிரதமர் மோடியை  புதன்கிழமை சந்திக்கும்போது மேற்கு வங்கத்தின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்துப் பேசுவேன் என்று அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
தில்லி புறப்படுவதற்கு முன்பு கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த அவர், இதுதொடர்பாக மேலும் கூறியதாவது:
மேற்கு வங்கத்தின் பெயரை பங்களா என பெயர் மாற்றும் விவகாரம், பொதுத் துறை வங்கிகளை இணைத்தது, பிஎஸ்என்எல், ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்கள் எதிர்கொண்டுவரும் பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசிப்பேன் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT