இந்தியா

ஆதாருடன் 'பான்' எண்ணை இணைக்க 30-ம் தேதி கடைசி நாள்: இணைக்காவிட்டால்.? 

ஆதாருடன் பான் எண்ணை இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் இணைக்க தவறினால், பான் அட்டை பயனற்றதாகிவிடும் என மத்திய நிதித் துறை

DIN

புதுதில்லி: ஆதாருடன் பான் எண்ணை இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் இணைக்க தவறினால், பான் அட்டை பயனற்றதாகிவிடும் என மத்திய நிதித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

நாட்டில் உள்ள அனைவருக்கும், 12 இலக்க எண்களை கொண்ட, ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையுடன், வருமான வரி கணக்கு தாக்கலுக்கு பயன்படும், பான் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான கால அவகாசம், பலமுறை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம், வரும் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பின்னரும் ஆதாருடன், பான் எண் இணைக்கப்படவில்லை எனில், அந்த குறிப்பிட்ட பான் அட்டை பயனற்றதாகிவிடும் என மத்திய நிதித்துறை எச்சரித்துள்ளது. 

பின்பு, அந்த அட்டையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியுமா என்பது குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT