இந்தியா

மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

DIN

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வநத நபர் இன்று காலை மரணம் அடைந்ததை அடுத்து, மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி பலியானவர்களின் எண்ணிக்கை 45 ஆக உள்ளது. 

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக 18 பேருக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா பாதிப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நாளாக மாறியுள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 146 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் கரோனா பரவும் வாய்ப்பு அதிகம் உள்ள மற்றும் மக்கள் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய இடங்கள் என்று 16 இடங்கள் கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் அதிக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட ஈரோடு மாவட்டமும் அடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT