முகப்பு
கரோனா பாதிப்பு
இந்தியா

கர்நாடகத்தில் கரோனா பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு காரணமாக மேலும் ஒருவர் பலியானார். 

இந்தியா

கர்நாடகத்தில் கரோனா பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு காரணமாக மேலும் ஒருவர் பலியானார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:21 PM
கரோனா பாதிப்பு
பகிர்:

கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு காரணமாக மேலும் ஒருவர் பலியானார். 

நாட்டில் கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தொடா்ந்து தீவிரமடைந்து வருகிறது. அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. எனவே, அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. 

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, வரும் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தின் பாகல்கோட் பகுதியில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார். இத்துடன் இங்கு பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் அந்த வைரஸால் இதுவரை 2,902 பேர் பாதிக்கப்பட்டுள்ளநிலையில் 68 பேர் பலியாகினர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →