இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 26 பேருக்கு கரோனா; பாதிப்பு 661 ஆக அதிகரிப்பு

DIN

மகாராஷ்டிரத்தில் மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 661 ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் இன்று மட்டும் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 661 ஆக அதிகரித்துள்ளது. 

இதில் புனேவில் 17 பேர், பிம்ப்ரி சின்ச்வாட் நகரில் 4, அகமது நகரில் 3, அவுரங்காபாத்தில் 2 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரி தகவல் தெரிவித்தார். 

மேலும் மும்பையில் கரோனா பாதிப்பு புள்ளிவிவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன, எனவே அவை பின்னர் வெளியிடப்படும்  என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் இதுவரை 32 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். 52 பேர் குணமடைந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT