ராஜஸ்தானில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 363 ஆக உயர்வு
ராஜஸ்தானில் புதன்கிழமை மாலை நிலவரப்படி கரோனா நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 363 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் புதன்கிழமை மாலை நிலவரப்படி கரோனா நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 363 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை உலுக்கிவரும் கரோனா நோய்த் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், ராஜஸ்தானில் இதுவரை 363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் பலியாகியுள்ளனர்.
இன்று மட்டும் கஜானாவுக்குப் புதிதாக 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 12 பேர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள் ஆவர். ராஜஸ்தான் தலைநகரில் மொத்தம் 118 பேர் கரோனா பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெய்ப்பூரில் கரோனா பாதித்த 62 வயதான முதியவர் எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனியார் நிறுவனத்தின் ஊழியரான அவர் காவந்தியா மருத்துவமனையிலிருந்து எஸ்எம்எஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகக் கூடுதல் தலைமைச் செயலர் ரோஹித் குமார் சிங் கூறியுள்ளார்.
கரோனா பாதித்த மீதமுள்ளவர்கள் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களின் தொடர்புடையவர்கள் ஆகும். தில்லியில் நிஜாமுதீன் பகுதியில் நடந்த இந்த மாநாட்டில் பங்கேற்ற பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மார்ச் 22 முதல் ராஜஸ்தானில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பல இடங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.