இந்தியா

கர்நாடகத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் பலி

PTI

பெங்களூரு: கர்நாடகத்தில் கரோனா தொற்றும் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

கடக் மாவட்டத்தில் 80 வயது பெண் இதய நோய் மற்றும் கடுமையான சுவாசக் கோளாறு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

பாதிக்கப்பட்ட பெண்ணின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. ஏப்ரல் 6ஆம் தேதி அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. 

இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 12.55க்கு அவர் உயிரிழந்தார். 

இதன்மூலம், கர்நாடகத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை மாலை நிலவரப்படி 181 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

SCROLL FOR NEXT