இந்தியா

பஞ்சாபில் உயிரிழந்த பெண்ணிற்கு கரோனா பாதிப்பு

DIN

பஞ்சாபில் உயிரிழந்த பெண் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பஞ்சாபில் முண்டி கரார்(Mundi Kharar) பகுதியைச் சேர்ந்த 78 வயது பெண் ஒருவர் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 7 ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சந்தேகத்தின் அடிப்படையில் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கரோனா தொற்று இருந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மொஹாலி மாவட்ட ஆட்சியர் இதனை தெரிவித்தார். 

அவருக்கு எவ்வாறு கரோனா தொற்று ஏற்பட்டது? அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பஞ்சாபில் 101 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 4 ஆகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT