கரோனா: மும்பை தாராவி பகுதி மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை தொடக்கம்
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் வசிக்கும் மக்களுக்கு அவர்களது வீடுகளுக்கேச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்யும் பணி இன்று தொடங்கியது.
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் வசிக்கும் மக்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று மருத்துவப் பரிசோதனை செய்யும் பணி இன்று தொடங்கியது.
தாராவியில் வெள்ளிக்கிழமை 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு காரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், தாராவியைச் சேர்ந்த 80 வயது முதியவர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மரணம் அடைந்தார். இதன் மூலம் இதுவரை தாராவியில் கரோனாவுக்கு நான்கு பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தாராவி பகுதி முழுவதும் முடக்கப்பட்டு, அங்கு வசிக்கும் மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யும் பணி இன்று தொடங்கியது. இந்த பணியில் 150 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement