இந்தியா

கரோனா: மும்பை தாராவி பகுதி மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை தொடக்கம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் வசிக்கும் மக்களுக்கு அவர்களது வீடுகளுக்கேச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்யும் பணி இன்று தொடங்கியது.

ANI


மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் வசிக்கும் மக்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று மருத்துவப் பரிசோதனை செய்யும் பணி இன்று தொடங்கியது.

தாராவியில் வெள்ளிக்கிழமை 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு காரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், தாராவியைச் சேர்ந்த 80 வயது முதியவர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மரணம் அடைந்தார். இதன் மூலம் இதுவரை தாராவியில் கரோனாவுக்கு நான்கு பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தாராவி பகுதி முழுவதும் முடக்கப்பட்டு, அங்கு வசிக்கும் மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யும் பணி இன்று தொடங்கியது. இந்த பணியில் 150 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!

வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது?: டி.கே.எஸ்.இளங்கோவன்

நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!

திருநெல்வேலி, விருதுநகா், ஈரோட்டில் டைடல் பூங்கா: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறாா்!

8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 'நீதித் துறையில் ஊழல்': மன்னிப்பு கோரியது என்சிஇஆா்டி

SCROLL FOR NEXT