மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் இந்தூரில் இருந்து ஜபல்பூரில் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், அதில் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற மூன்று பேரும் சிறைச்சாலையின் உள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று ஜபல்பூரில் மாவட்ட ஆட்சியர் பாரத் யாதவ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.