இந்தியா

ராஜஸ்தான்: பிளாஸ்டிக் பைகளில் துப்பி வீடுகளில் வீசியப் பெண்; சிசிடிவி கேமராவில் சிக்கினார்

நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையாகப் போராடி வருகின்றன.

ANI


நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையாகப் போராடி வருகின்றன.

இதற்கிடையே, ராஜஸ்தானில், ஒரு பெண் பிளாஸ்டிக் பைகளில் துப்பி, அதனை வீடுகளுக்குள் வீசிச் செல்லும் சிசிடிவி கேமரா பதிவு காவல்துறையினருக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டம் வல்லப்வாடி பகுதியில், ஒரு பெண்மணி, பிளாஸ்டிக் கவர்களில் துப்பி, அதனை வீடுகளுக்குள் வீசி எறியும் சிசிடிவி கேமரா பதிவைப் பார்த்த காவல்துறையினர், உடனடியாக அப்பகுதியை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தினர். குற்றம் இழைத்த பெண்மணியை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுவிடங்களில் எச்சில் துப்புவது தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை எட்டிவிட்டது. உயிரிழப்பு 300 ஆக இருக்கும் நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சில விஷமிகளின் இதுபோன்ற செயல்களால், மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!

வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது?: டி.கே.எஸ்.இளங்கோவன்

நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!

திருநெல்வேலி, விருதுநகா், ஈரோட்டில் டைடல் பூங்கா: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறாா்!

8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 'நீதித் துறையில் ஊழல்': மன்னிப்பு கோரியது என்சிஇஆா்டி

SCROLL FOR NEXT