முகப்பு
இந்தியா

பாரம்பரிய சால்வையை பயன்படுத்திய மோடி: மணிப்பூர் மக்கள் மகிழ்ச்சி

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் ஊரடங்கு மே மாதம் 3 வரை நீட்டிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார்.

Updated On : 14 ஏப்ரல், 2020 at 5:07 PM
பகிர்:

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் ஊரடங்கு மே மாதம் 3 வரை நீட்டிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார்.

இன்று காலை 10 மணிக்கு மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றிய போது இந்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவரை தொலைக்காட்சி வாயிலாக பார்த்துக் கொண்டிருந்த மணிப்பூர் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

அதற்குக் காரணம், மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது அவர் ஒரு சால்வையை அணிந்திருந்தார். அது மணிப்பூர் மக்களின் பாரம்பரிய சால்வையாகும். அஸ்ஸாம் மக்கள் பயன்படுத்தும் கமோசா சால்வை போன்று இது மணிப்பூரி மக்களின் லெங்யான் சால்வை என்று அழைக்கப்படுகிறது.

Advertisement

இது குறித்து மணிப்பூர் முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, மணிப்பூர் மாநிலத்தின் பாரம்பரிய சால்வையை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தியதற்கு எனது மனப்பூர்வ பாராட்டுகள். இதன் மூலம், அவர் வடகிழக்கு மாநிலங்களை குறிப்பாக மணிப்பூரை எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பது வெளிப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.