இந்தியா

ஊழியருக்கு கரோனா: வியத்நாம் சாம்சங் ஆலைக்கு சீல்!

DIN

வியத்நாமில் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றிய ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தென்கொரிய தயாரிப்பு நிறுவனமான சாம்சங், வியத்நாமின் பேக் நின் நகரில் உள்ள மொபைல் டிஸ்பிளே தயாரிப்பு தொழிற்சாலையை மூடியதாக அறிவித்துள்ளது. 

தொழிற்சாலையில் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அந்த ஆலைக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. 

முன்னதாக, அங்கு தயாரித்த மொபைல் டிஸ்பிளே பல்வேறு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராட் கோலி, ரஜத் படிதார் அதிரடி; பஞ்சாப் கிங்ஸுக்கு 242 ரன்கள் இலக்கு!

இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: லெபனானில் 4 பேர் பலி!

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிகை 10ஆக உயர்வு

ராகுலுக்கும், மோடிக்கும்தான் நேரடிப் போட்டி: அமித் ஷா

SCROLL FOR NEXT