மருந்து, மருத்துவ உபகரணங்களை எடுத்து வர சீனா புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கரோனா தொற்றைக் கண்டறியும் விரைவு பரிசோதனை கருவிகள், மருந்துகள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை சீனாவில் இருந்து கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது.
அதற்காக தில்லியில் இருந்து ஏர் இந்தியா பி-787 விமானம் சீனாவின் குவாங்சொய் மாகாணத்துக்கு புறப்பட்டுள்ளது.
Advertisement
இந்தியாவில் 14,378 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 480 பேர் மரணம் அடைந்துள்ளனர். முன்னதாக சீனாவிடம் இருந்து விரைவு பரிசோதனை கருவிகள் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியா வந்து சேர்ந்தது.