இந்தியா

பஞ்சாப்: கரோனா பாதித்த காவல் உதவி ஆணையர் மரணம்

பஞ்சாப் மாநிலம் லூதியாணாவில் காவல் உதவி ஆணையராக பணியாற்றி வந்தவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் மரணம் அடைந்தார்.

ANI

பஞ்சாப் மாநிலம் லூதியாணாவில் காவல் உதவி ஆணையராக பணியாற்றி வந்த அனில் கோலி, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் மரணம் அடைந்தார்.

இந்தியாவில், முதல் முறையாக கரோனா பாதித்து காவல்துறை அதிகாரி ஒருவர் மரணம் அடைந்துள்ளார். 

லூதியாணாவில் உள்ள எஸ்பிஎஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனில் கோலி இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்த தகவலை மாவட்ட மக்கள் தொடர்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பிளாஸ்மா சிகிச்சை அளித்து அவரை குணப்படுத்த மருத்துவமனை மருத்துவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், அவர் மரணம் அடைந்துள்ளார்.

ஏற்கனவே, இந்தியாவில் கரோனா பாதித்த மருத்துவர் ஒருவர் மரணம் அடைந்த நிலையில், தற்போது காவல்துறை அதிகாரி ஒருவரும் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பாலியல் தொல்லை: அரசு மருத்துவமனை ஊழியா் கைது

திருப்போரூா் கந்தசாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவம் பூத வாகனத்தில் முருகப் பெருமான்

SCROLL FOR NEXT