இந்தியா

மே 3 ஆம் தேதி வரை பஞ்சாப், கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை

மே 3 ஆம் தேதி வரை பஞ்சாப், கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

மே 3 ஆம் தேதி வரை பஞ்சாப், கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முதலில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கை தளா்த்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு கடந்த புதன்கிழமை வெளியிட்டது. அதாவது ஊரகப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், விவசாயம் சாா்ந்த பணிகள், நெடுஞ்சாலை உணவகங்கள் உள்ளிட்ட முக்கிய தொழில்களுக்கு ஏப்ரல் 20 முதல் தளா்வு அளித்து இயங்க அனுமதிக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. மேலும் இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யவும் அறிவுறுத்தியிருந்தது

இந்நிலையில், கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,  பஞ்சாப், கர்நாடகத்தில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் எதுவும் அமல்படுத்தப்பட மாட்டாது என்றும்  பஞ்சாப், கர்நாடக மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT