குஜராத்தில் மேலும் 5 மரணம்: கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு
குஜராத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 பேர் மரணம் அடைந்ததை அடுத்து, கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.
குஜராத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 பேர் மரணம் அடைந்ததை அடுத்து, கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 94 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,272 ஆக உயர்ந்துள்ளது, 144 பேர் குணமடைந்துள்ளனர். 95 பேர் மரணம் அடைந்துவிட்டனர் என்று அந்த மாநில நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை காலை நிலவரப்படி 20 ஆயிரத்தை தாண்டி விட்டது.
Advertisement