திருவனந்தபுரம்: கேரளத்தில் இன்று புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், மாநிலத்தில் கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்திருப்பதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள் என 447 பேர் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் 23 ஆயிரம் பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 437 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் விஜயன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.