ராஜஸ்தானில் இதுவரை 27 பேர் கரோனாவுக்கு பலி: பாதிப்பு 1,935 ஆனது
ராஜஸ்தானில் வியாழக்கிழமை புதிதாக 47 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வியாழக்கிழமை புதிதாக 47 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதிதாகப் பாதிக்கப்பட்ட 47 பேரில், ஜோத்பூர் (20), ஜெய்ப்பூர் (12), நாகூர் (10), கோட்டா மற்றும் ஹனுமன்காரில் இருந்து தலா இரண்டும், அஜ்மீரில் ஒன்றும் பதிவாகியுள்ளது.
கரோனாவுக்கு இதுவரை மொத்தம் 1,935 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஆனால், தொற்று பாதிக்கப்பட்டு 344 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். அவற்றில் 133 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. கரோனாவுக்கு அந்த மாநிலத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர்.