கிழக்கு ரயில்வே மருத்துவமனை மருத்துவருக்கு கரோனா உறுதி
கிழக்கு ரயில்வே (ஈ.ஆர்) மருத்துவமனையின் பெண் மருத்துவர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உ
கொல்கத்தா: கிழக்கு ரயில்வே (ஈ.ஆர்) மருத்துவமனையின் பெண் மருத்துவர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ரயில்வே மண்டல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் ஏப்ரல் 14-ம் தேதி முதல் மருத்துவர் விடுப்பில் இருந்தார். இந்நிலையில் அவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில், கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிசிக்சைப் பெற்று வருகிறார்.
கிழக்கு ரயில்வேயின் பிரதான மருத்துவமனையான பி.ஆர்.சிங் மருத்துவமனையில் குறைந்தது 10 ஊழியர்கள் அவருடன் பணியாற்றியதால், மருத்துவ நிறுவனம் அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெண் மருத்துவரின் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் வீட்டுத் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு மாநில சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அவர்கள் நால்வரும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பி.ஆர்.சிங் மருத்துவமனையில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட யாரும் சிகிச்சை பெறவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.