தொழிலாளர்களுக்கு கரோனா தொற்றினால் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை கிடையாது: மகாராஷ்டிர அரசு
தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி தவறானது என்று மகாராஷ்டிர அரசு விளக்கம் அளித்துள்ளது.
தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி தவறானது என்று மகாராஷ்டிர அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்த தகவலில் உண்மையில்லை என்றும், மாநில அரசு அதுபோன்ற உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்றும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் அல்லது ஊழியர்கள் யாருக்கேனும் கரோனா தொற்று ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை அல்லது நிறுவனம் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று வாட்ஸ் ஆப்பில் தகவல்கள் பரவின.
இது குறித்து மகாராஷ்டிர மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், இதுவரை மாநில அரசு அதுபோன்ற எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டாலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை மட்டுமே மாநில அரசு உறுதி செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.