முகப்பு
இந்தியா

தில்லி விமான நிலையத்தில் பணியாற்றிய சிஐஎஸ்எஃப் காவலருக்கு கரோனா

புது தில்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றி வந்த மத்திய தொழிற்பாதுகாப்புப் படை வீரருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 24 ஏப்ரல், 2020 at 4:27 PM
கோப்புப் படம்.
பகிர்:

புது தில்லி: புது தில்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றி வந்த மத்திய தொழிற்பாதுகாப்புப் படை வீரருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஜஜ்ஜாரில் சிறப்பு வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மத்திய தொழிற்பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், புது தில்லியில் இதுவரை 2,376 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 808 பேர் குணமடைந்துள்ளனர். 50 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.

Advertisement

இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,684 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 23 ஆயிரத்தைத் தாண்டியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.