கோப்புப் படம். 
இந்தியா

தில்லி விமான நிலையத்தில் பணியாற்றிய சிஐஎஸ்எஃப் காவலருக்கு கரோனா

புது தில்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றி வந்த மத்திய தொழிற்பாதுகாப்புப் படை வீரருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ANI

புது தில்லி: புது தில்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றி வந்த மத்திய தொழிற்பாதுகாப்புப் படை வீரருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஜஜ்ஜாரில் சிறப்பு வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மத்திய தொழிற்பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், புது தில்லியில் இதுவரை 2,376 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 808 பேர் குணமடைந்துள்ளனர். 50 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.

இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,684 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 23 ஆயிரத்தைத் தாண்டியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”ரொம்ப அரிய தலைவர் நல்லகண்ணு!” நடிகர் கார்த்தி அஞ்சலி

சென்னையில் முகாமிடும் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்! காரணம் என்ன?

சின்ன சின்ன டிப்ஸ்! உடலுக்கும் வீட்டுக்கும்!

சிறப்புக் காட்சியில் வரவேற்பைப் பெற்ற தாய் கிழவி..! பிரபலங்கள் பங்கேற்பு!

போராடும் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

SCROLL FOR NEXT