109 நோயாளிகள்.. நொய்டாவில் மேலும் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி இணைந்தது
கரோனாவுக்கு எதிராக தீவிரமாகப் போராடி வரும் நொய்டாவில் மேலும் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி இணைந்துள்ளது. இதையும் சேர்த்து அங்கு தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் 34 ஆனது.
நொய்டா: கரோனாவுக்கு எதிராக தீவிரமாகப் போராடி வரும் நொய்டாவில் மேலும் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி இணைந்துள்ளது. இதையும் சேர்த்து அங்கு தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் 34 ஆனது.
ஒரே நாளில் அங்கு 6 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நொய்டாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கையை 109 ஆக உயர்த்திவிட்டது.
நொய்டாவில் கரோனா பாதித்தவர்களில் இதுவரை 56 பேர் குணமடைந்துள்ளனர், 53 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Advertisement
நொய்டாவில் புதிதாக ஒருவருக்கு கரோனா பாதித்த செக்டார் 45வது பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட வகுதியாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.