இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 522 பேருக்கு கரோனா; 27 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 522 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

DIN

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 522 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தொடர்ந்து மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. பாதிப்பு நேற்று 8 ஆயிரத்தைக் கடந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 522 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 8,590 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் பலியானோரின் எண்ணிக்கை 369 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இதில் 1,292 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் அதிகம் பாதிப்பட்ட பகுதியாக மும்பை உள்ளது. இங்கு 3,096 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து புணேவில் 660, தானே பகுதியில் 465 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் பாதிப்பு 29,435, உயிரிழப்பு 934 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

SCROLL FOR NEXT