இந்தியா

தில்லியில் ஊடகவியலாளர்கள் 529 பேரில் 3 பேருக்கு கரோனா உறுதி: கேஜரிவால்

தில்லியில் இதுவரை கரோனா பரிசோதனை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் 529 பேரில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த்கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

DIN

தில்லியில் இதுவரை கரோனா பரிசோதனை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்  529 பேரில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

தலைநகர் தில்லியில் 3,314 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 1,078 பேர் குணமடைந்துள்ளனர். முன்னதாக, நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஊடகவியலாளர்களுக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து, தில்லியில் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும் என முதல்வர் கேஜரிவால் தெரிவித்திருந்தார். 

அதன்படி, பரிசோதனை செய்யப்பட்ட 529 பேரில் 3 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், அவர்கள் மூவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் பணி மிகவும் முக்கியமானது என்றும் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT