முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரிடையே நேற்று இரவு

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:33 PM
பகிர்:

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரிடையே நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் புதன்கிழமை காலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

செவ்வாயன்று ஜைனாபோரா பகுதியில் மெல்ஹோராவில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். 

தீவிரவாதிகள் தொடர்ந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு, பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்துவருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.