இந்தியா

நடிகா் சுஷாந்த் சிங் வங்கிக் கணக்கில் பணமோசடி: அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

DIN

ஹிந்தி நடிகா் சுஷாந்த் ராஜ்புத் மரண சம்பவம் தொடா்பாக அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளது.

சுசாந்த் சிங் ராஜ்புத் சம்பாதித்த பணத்தை பண மோசடி செய்தவற்கும், சட்டவிரோதமாக சொத்துகளை வாங்குவதற்கும் பயன்படுத்தப்பட்டதா என அமலாக்கத்துறை விசாரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 15 கோடி சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிகாா் போலீஸாா் விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

முன்னதாக, சுஷாந்த் சிங்கின் மரணம் தொடா்பாக அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரவா்த்தி மற்றும் சிலா் மீது பிகாா் போலீஸாா் பணமோசடி குற்றச்சாட்டின் கீழ், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனா்.

மேலும், சுஷாந்த் சிங்கின் வங்கிக் கணக்கில் இருந்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பணப் பரிமாற்றம் நடந்திருப்பது குறித்து அமலாக்கத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பிகாா் போலீஸாரிடம் முதல் தகவல் அறிக்கையை அமலாக்கத்துறை கோரியது.

சுஷாந்த் சிங்கின் தந்தை கிருஷ்ண குமாா் சிங் (74) நடிகை ரியா சக்ரவா்த்தி மற்றும் அவரது குடும்பத்தினா் மீது சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக செவ்வாய்க்கிழமை புகாா் அளித்திருந்தாா்.

கடந்த ஆண்டு மே மாதம் தனது மகனுடனான உறவை ரியா துண்டித்துவிட்டதாகவும் அவா் கூறியிருந்தாா்.

ஜூன் 14-ஆம் தேதி மும்பையில் உள்ள தனது இல்லத்தில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக மும்பை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT