கோவை கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஹேக்கத்தான் 2020 ஒருங்கிணைப்பு மையத்தின் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
நாடு எதிர்கொள்ளும் சவால்களைக் களையவும், மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வை கண்டுபிடிக்கும் வகையிலும், மாணவர்களிடையே பிரச்னைக்குத் தீர்வு காணும் மனநிலையை ஊக்குவிக்கும் வகையிலும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) சார்பில் இந்த இணையவழி ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் இறுதிச் சுற்றின் முடிவில் கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அப்போது கோவையைச் சேர்ந்த மாணவிக்கு தமிழில் வணக்கம் தெரிவித்து உரையாடலைத் தொடங்கினார் பிரதமர் மோடி.