இந்தியா

நாக்பூரில் சர்க்கரை ஆலை பாய்லர் வெடித்து 5 பேர் பலி

நாக்பூரில் சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்ததில் 5 பேர் பலியானார்கள். 

DIN

நாக்பூரில் சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்ததில் 5 பேர் பலியானார்கள். 

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் மானாஸ் அக்ரோ என்ற சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், இன்று பிற்பகல் 2.14 மணியளவில் திடீரென கொதிகலன் வெடித்து விபத்திற்குள்ளானது. தொடர்ந்து தீபற்றி எரிந்தது. இதில் ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்த 5 பேர் பலியானார்கள். 

மேலும் இருசக்கர வாகனம் ஒன்றும் சேதமடைந்தது. சம்பவத்தை தொடர்ந்து பலர் ஆலையின் முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனிடையே மானாஸ் அக்ரோ ஆலையை மத்திய அமைச்சர் நிதிக் கட்கரியின் குடும்பத்தினர் நிர்வகித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என சிவசேனை தலைவர் கிஷோர் திவாரி வலியுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மமதா மீது சிபிஐ வழக்குப் பதிய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு!

குளிர் அலை: அதிகாலையில் நடைப்பயிற்சி வேண்டாமே! செய்யக்கூடாதவை..

புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 பொங்கல் பரிசு! ஆனால்...

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.90.16ஆக நிறைவு!

விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

SCROLL FOR NEXT