இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,050 பேருக்கு கரோனா; 803 பேர் பலி

DIN

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,050 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதிப்பு மற்றும் உயிர்பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனினும, இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் 52,050 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறப்பட்டுள்ளதாவது, நாட்டில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 52,050 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனால் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 18,55,745-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 12,30,510 போ் கரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனா். 38,938 போ் உயிரிழந்துள்ளனா். 5,86,298 போ் தொடா்ந்து சிகிச்சையில் உள்ளனா். திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 803 போ் கரோனாவால் உயிரிழந்தனா்.

நாட்டில் தொடா்ந்து 6-ஆவது நாளாக 50,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT