முகப்பு
இந்தியா

தில்லியில் மீண்டும் ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

​தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,076 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
​தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,076 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
பகிர்:


தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,076 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பின்படி:

தில்லியில் புதிதாக 1,076 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, மேலும் 11 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,40,232 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,26,116 பேர் குணமடைந்துள்ளனர், 4,044 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் தில்லியில் 10,072 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மட்டும் 16,785 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 10,99,882 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை 9,295 பரிசோதனை நடத்தப்பட்டதில், 674 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →