ஒடிசா மாநிலத்தில் புதிதாக 1833 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று
ஒடிசா மாநிலத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி புதிதாக 1833 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தவண்ணம் உள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி புதிதாக 1833 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 550 ஆக அதிகரித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் கரோனா தொற்றால் 247 பேர் பலியாகியுள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் தற்போது 15 ஆயிரத்து 370 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.கரோனா தொற்றிலிருந்து 26 ஆயிரத்து 888 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.