இந்தியா

தெலங்கானாவில் புதிதாக 1,982 பேருக்கு கரோனா: 12 பேர் பலி

DIN

தெலங்கானாவில் புதிதாக 1,982 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவிலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக தெலங்கானா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1,982 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 79,495-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 12 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 627-ஆக அதிகரித்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) மட்டும் 1,669 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக 55,999 பேர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 16,112 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

SCROLL FOR NEXT