முகப்பு
இந்தியா

நேபாளம் நாட்டிற்கு ரூ.2.8 கோடி மதிப்பிலான வென்டிலேட்டர்களை வழங்கிய இந்தியா

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவும் விதமாக ரூ.2.8 கோடி மதிப்பிலான 10 வென்டிலேட்டர் கருவிகளை நேபாளம் நாட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை இந்தியா வழங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
நேபாளம் நாட்டிற்கு வழங்கப்பட்ட வென்டிலேட்டர்கள்
பகிர்:

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவும் விதமாக ரூ.2.8 கோடி மதிப்பிலான 10 வென்டிலேட்டர் கருவிகளை நேபாளம் நாட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை இந்தியா வழங்கியது.

நேபாளத் தலைநகர் காத்மண்டில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேபாளத்திற்கான இந்தியத் தூதர் வினய் மோகன் குவாத்ரா வென்டிலேட்டர்களை ராணுவத் தலைமை அதிகாரி பூர்ண சந்திர தபாவிடம் வழங்கினார்.

நேபாளத்தில் ஏற்படும் பேரிடர்களில் மீட்பு பணிகளில் இந்திய ராணுவம் உதவி வந்துள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வெண்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →