இந்தியா

கேரளத்தில் புதிதாக 1,212 பேருக்கு கரோனா: பினராயி விஜயன்

DIN


கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,212 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த பினராயி விஜயன் இதுபற்றி தெரிவித்ததாவது:

"கேரளத்தில் புதிதாக 1,212 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர். புதிதாக பாதிக்கப்பட்டோரில் 1,068 பேர் உள்ளூர் பரவல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்." என்றார்.

இதைத் தொடர்ந்து கேரள நிலச்சரிவு பற்றி அவர் பேசியதாவது:

"இன்று மேலும் 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது." என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT