காஷ்மீரில் மத்திய ரிசர்வ் காவல்துறை படை (சிஆர்பிஎஃப்) வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உடனே அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீநகரில் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட அவர் சி.ஆர்.பி.எஃப் படையைச் சேர்ந்த எம்.தாமோதர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர் எதற்காக தன்னைத்தானே சுட்டுக்கொண்டார் என்ற விவரங்கள் குறித்து
சிஆர்பிஎஃப் விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.