மகாராஷ்டிரம்: 24 மணி நேரத்தில் 294 காவலர்களுக்கு கரோனா; 3 காவலர்கள் பலி
நாட்டிலேயே கரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 294 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 காவலர்கள் பலியாகியுள்ளனர்.
மும்பை: நாட்டிலேயே கரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 294 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 காவலர்கள் பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை காவல்துறை உயர் அதிகாரிகள் 11 பேர் உள்பட 121 காவலர்கள் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இன்று புதிதாக 294 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்த காவலர்களின் எண்ணிக்கை 11,392 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9,187 பேர் குணமடைந்துள்ளனர். 2,084 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.