பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றமில்லை: ராணுவ மருத்துவமனை விளக்கம்
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ஏற்பட்ட கட்டியை அகற்ற டெல்லி ராணுவ மருத்துவமமையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் அறுவை சிகிச்சைக்குப் பின் அவரின் உடல்நிலை மோசமடைந்தது. இதுகுறித்து சனிக்கிழமை காலை ராணுவ மருத்துவமனை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
”பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் இதுவரை முன்னேற்றம் ஏற்படவில்லை. அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசக் கருவி மூலம் உயிர்வாயு அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்” என ராணுவ மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.