நிதி ஆயோக் அமைப்பின் ஏற்றுமதிக்கான தரவரிசை பட்டியலில் குஜராத் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை மகாராஷ்டிரமும், மூன்றாவது இடத்தை தமிழகமும் பிடித்துள்ளன.
ஏற்றுமதிக்கான தரவரிசை பட்டியலை நிதி ஆயோக் அமைப்பு தயாரித்துள்ளது. மாநிலங்களின் ஏற்றுமதி ஊக்குவிப்புக் கொள்கை, வா்த்தகச் சூழல், உற்பத்திக்கான உள்கட்டமைப்பு வசதிகள், போக்குவரத்து தொடா்பு, நிதி, ஏற்றுமதிக்கான உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலை நீதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவா் ராஜீவ் குமாா், தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டாா்.
அதில் குஜராத் முதலிடத்தையும், மகாராஷ்டிரம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் முறையே 2-ஆவது, 3-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. தரவரிசையில் முதல் பத்து மாநிலங்களில், 8 மாநிலங்கள் கடலோரப் பகுதியில் அமைந்துள்ளன. அவற்றில், 6 மாநிலங்களில் ஏற்றுமதிக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் வலுவாக உள்ளன.
கடற்கரை பகுதி அல்லாத மாநிலங்களில் ராஜஸ்தான் முதலிடத்திலும், தெலங்கானா, ஹரியாணா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. இமயமலைத் தொடரில் உள்ள மாநிலங்களில் உத்தரகண்ட் முதலிடத்திலும், திரிபுரா, ஹிமாசல பிரதேசம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
யூனியன் பிரதேசங்களில், தில்லி முதலிடத்திலும், கோவா, சண்டீகா் முறையே 2-ஆவது மற்றும் 3-ஆவது இடத்திலும் உள்ளன.
நிகழ்ச்சியில் நிதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா் பேசுகையில், ‘ஏற்றுமதி என்பது சுயச்சாா்பு இந்தியா திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். எனவே, உலகளாவிய வா்த்தகம், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றில் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.